பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
கருந்திரள் நோய் : ரைசோக்டோனியா சொலானி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • கிழங்குகளில் கருப்புப் புள்ளி, கருப்புப் பொருக்குப்புள்ளி, பழுப்பு நிறப்பொருக்கு தோன்றும்.
  • அதி வேகமாக வளரும் போது, அடர் பழுப்பு நிறம் கண்ணிற்குத் தெரிகிறது.
  • பாதிக்கப்பட்ட சைலம் திசு செடிகளை அழுகச் செய்கிறது.
  • உள் திசுக்கள் பழுப்பு நிறமான உலர்ந்த கடினமான அழுகலைக் கொண்டிருக்கும்.
  • வெகுவான பாதிக்கப்பட்ட கிழங்கு தோன்றும்.
  • விதை கிழங்குகள் நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளது.
  • மிதமான குளிர், ஈர வானிலை மற்றும் 23°செல்சியஸ் வெப்பநிலை நோய் வளர்ச்சிக்குக் காரணமாகிறது.
 
  கிழங்குகளில் கருப்புப் புள்ளி பழுப்பு நிறப்பொருக்கு தண்டு மீது மூழ்கிய புண் அழுகிய தண்டு
நோய் காரணி:

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • விதை கிழங்குகளில் உள்ள செலரோஷியா, கிழங்கிலிருந்து தோன்றும் மற்ற செடிகளை பாதிப்பிற்கு முதன்மைக் காரணமாக அமைகிறது.
  • மண்ணில் உள்ள மைசீலியம் பூஞ்சான் சாதகமான நிலையில் இலையை உற்பத்தி செய்கிறது.
கட்டுப்படுத்தும் முறை:
  • நோய் இல்லாத விதைக்கிழங்குகளை மட்டும் நடப்பட வேண்டும்.
  • கருந்திரள் நோய் சிறிது இருந்தாலும், மெர்க்குரிக் குளோரைடு கரைசலில் 1.5 மணி நேரம் மற்றும் அசிடுலேட்ட் மெர்க்குரிக் குளோரைடு கரைசலில் 5 நிமிடம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • மண்ணை பென்டாக்குளோரோனி ட்ரோபென்சீன் ஐக்கொண்டு நேர்த்தி செய்வதன் மூலம் 70 கிலோ/ எக்டர் என்ற வீதம் நோயைக்குறைக்கிறது. ஆனால் இது மிகவும் விலையுயர்ந்த்து மற்றும் சிக்கலானது.
  • நன்கு ஸ்போருலேட்ட்ட் கிழங்கை மேலோட்டமாக நடவு செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • பாதிக்கப்பட்ட நிலத்தை 2 ஆண்டுகள் தரிசாக விடுவதன் மூலம் நோயின் தீவிரத்தன்மையை குறைக்கலாம்.
Source of Images:
http://www.potatodiseases.org/rhizoctonia.html
https://www.rhs.org.uk/advice/profile?PID=744

http://c8.alamy.com/comp/BY9JJW/russeting-with-a-reticulation-appearance-on-the-skin-surface-of-a-BY9JJW.jpg

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015